logo

சென்னையில் AiMA ஆலோசனை கூட்டம் 08-04-24 அன்று அனைவரும் வருக ஆதரவு தருக .....

எனது அருமை குடும்ப உறவுகளே அனைவருக்கும் இனிய மதியநேர வணக்கங்களை உரித்தாக்கி கொள்கிறேன் ..... சென்னை மாநகரத்தின் முதன்மை அமைப்பாக நமது அமைப்பை கொண்டு வருவதற்கான அனைத்து முதற்கட்ட அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டு நமது குடும்ப உறவுகளின் நல் ஆதரவோடு திறம்பட செயல்படுத்தப்பட உள்ளது.அதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டமானது வருகின்ற *08-04-2024 திங்கட்கிழமை* *மாலை 5.00 மணி முதல் இரவு 8 மணி வரை* திருவெற்றியூரில் உள்ள *சுபா மஹாலில்* எனது அருமை சகோதரர் மதிப்புமிகு சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.அது சமயம் அன்றைய தினம் தலைமையின் முடிவாக சில முக்கிய அம்சங்கள் அடங்கிய திட்டங்களும் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்வதற்கான *நிர்வாக குழுவும்* நியமிப்பதற்கான முன்னேற்பாடுகளும் விண்ணப்ப படிவங்களும் உரிய முறைப்படி வழங்கப்பட உள்ளது.அது சமயம் இதுவரை அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்ய முடியாத நபர்களுக்கு கூட்டம் நடைபெறும் மகாலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் வருகை புரிந்தால் உங்களது சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதை எவ்வாறு என்பதனை பற்றியும் மேலும் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்தும் அனைவருக்கும் தேவைப்படுவதை செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.அது சமயம் களத்தில் யார் முன்னிருக்கிறார்கள் என்பதை விட யாரை முன் நிறுத்தி இந்த களம் இருக்கின்றது என்பதை அனைவரும் நெஞ்சார்ந்து உணர்ந்திட வேண்டும் களத்தில் முன்நிற்பது *தலைவனாக* இருக்கலாம் ஆனால் களம் அனைவருக்கும் ஆனது என்பதை உணர்ந்தவன் நான் ஆகவே அனைவரும் நல் ஆதரவளித்து நடைபெற இருக்கின்ற பதவியேற்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தங்களால் முடிந்த அளவிற்கு உதவி புரிந்து உள்ளார்ந்த உங்களது சிந்தனைகளை அனைவருக்கும் ஆலோசனையாக அள்ளித் தெளித்து அனைவரையும் ஆற்றல் மிக்க நபர்களாக உருவாக்க வேண்டியது அனைவரது கடமை எனப் புரிந்து அனைவரும் வருகை தாருங்கள் தாருங்கள் தாருங்கள் எனக் கூறிக்கொண்டு உங்களிடத்தில் அனைத்து கேள்விகளையும் அனைத்து பதில்களையும் உங்களிடத்தில் வைத்து உங்களுக்காக காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் தோழமையுடன் M.கார்த்திகேயன்
Cell.9443916341

16
724 views